திருக்கோணேஸ்வரர் ஆலய கடைத்தொகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது
திருகோணமலை(Trincomalee) - திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (23.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
மிகிந்த புரம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் கடைத் தொகுதியில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரே கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேகநபர் 15 போத்தல்களில் 14 போத்தல்களை விற்பனை செய்துள்ள நிலையில் எஞ்சியுள்ள ஒரு போத்தலுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை (25)திருகோணமலை நீதிமன்ற நீதவானிடம் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam
