தென்கொரியாவில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து : பலர் பலி
தென்கொரியாவில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரிய நாட்டின் ஜியோங்கி மாகாணம் ஹவாஸ்சோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த தொழிற்சாலையில் 67 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைடுத்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
இருப்பினும் 20 தொழிலாளர்கள் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மேலும் 23 தொழிலாளர்கள் நிலைமை தொடர்பில் தகவல் வெளிவராத காரணத்தினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
