திருகோணமலை பேருந்து விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு
திருகோணமலை - உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த நபர் இன்று (05.01.2024) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர், கடந்த முதலாம் திகதி வீதியை கடக்க முற்பட்டபோது மூதூர் டிப்போவுக்கு சொந்தமான பேருந்துடன் மோதி, படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
தொடர்ந்து, அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை கஸ்தூரி நகரை சேர்ந்த கருப்பையா கருணாநிதி (43 வயது) என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan