வெளிநாட்டில் ஆபத்தான இலங்கையர் அணிந்திருந்த பெருந்தொகை தங்கம் - அதிர்ச்சியில் சிஐடியினர்
அசர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்டு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இலங்கையரிடம் பெருந்தொகை தங்கம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு இழுத்து வரப்பட்ட மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் பட்டுவத்தே சாமர எனும் சந்தேகநபர், கைது செய்யப்படும் போது ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க ஆபரணங்களை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
BRAVE என எழுதப்பட்ட பென்டனுடன் கூடிய 30 கிராமுக்கும் அதிக எடையுள்ள 50 சென்டிமீட்டர் நீளமான தங்க சங்கிலி, நீல நிற மாணிக்கக்கல் பதிக்கப்பட்ட 11 கிராமுக்கும் அதிக எடையுள்ள தங்க மோதிரம், 93 கிராம் எடையுள்ள 23 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட தங்கக் காப்பு, 06 கிராம் எடையுள்ள இரண்டு தோடுகள் மற்றும் ரோலக்ஸ் ரக கைக்கடிகாரம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
பெருந்தொகை தங்கம்
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவத்தின் 32வது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவரை, கடந்த 11ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களக் குழுவினர் அசர்பைஜானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வந்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

வெளிநாட்டில் இருந்துகொண்டு கணேமுல்ல சஞ்சீவ கொலைக்காக துப்பாக்கியை வழங்கி, கொலைக்கு உதவி மற்றும் அனுசரணை வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபரை, மேலும் 14 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெற்று விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam