ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் 44வீத அமெரிக்க வரி ஒரே அழைப்பில் நீங்கியிருக்கும் : முன்னாள் எம்.பி பகிரங்கம்
ரணில் விக்ரமசிங்க தற்போதும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இலங்கை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 44வீத வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யூடியூப் செனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது பேசிய முன்னாள் அமைச்சர், பில்லியனர் தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது இந்த வரி விதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
ரணிலின் நெருங்கிய நண்பர்களில் எலோன் மஸ்க்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களில் எலோன் மஸ்க் ஒருவர் என்றும், அந்த வலுவான நட்பைப் பயன்படுத்தி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரமசிங்க ஜனாதிபதியாக இல்லாததால் இலங்கை அந்த வாய்ப்பை இழந்துள்ளதாக ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.
ரணில் பதவியில் இருந்திருந்தால், 44வீத வரியை முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் 24வீதமாகக் குறைத்திருக்கலாம் என்றும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |