வவுணதீவு பகுதியில் பொலிஸாரால் ஒருவர் கைது
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் அனுமதிப்பத்திர நிபந்தனையினை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் நிலையப்பதில் பொறுப்பதிகாரி ஜீ.எஸ்.பிரியங்கரவின் ஆலோசனைக்கமைவாக, விஷேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கன்னங்குடா பகுதியில் வைத்து மேற்படி வாகனத்துடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மண்ணுடன் கைப்பற்றப்பட்ட வாகனத்தையும்,கைது செய்யப்பட்ட நபரையும்
சட்ட நடவடிக்கையின் பொருட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுணதீவு பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி ஜீ.எஸ்.
பிரியங்கர தெரிவித்துள்ளார்.
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்கா... கப்பல்களில் எண்ணெய் நிரப்புவதை தீவிரப்படுத்தும் ஈரான் News Lankasri