வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வீடு புகுந்து வாள்வெட்டில் ஈடுபட்டமை தொடர்பில் இளைஞர் ஒருவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று (26.05) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (25.05) இரவு 11 மணியளவில் புகுந்த குழுவொன்று அங்கிருந்த பெண்கள் உட்பட வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டது.
இதனால 3 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரை குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்,
விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலும் சிலரையும் தேடி வருகின்றனர்.