கொழும்பு பல்கலைக்கழக மாணவி மீது துன்புறுத்தல் - ஒருவர் கைது
ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில், 27 வயதுடைய கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பின்னால் அமர்ந்திருந்த சந்தேக நபர், பலமுறை தகாத முறையில் அவரைத் தொட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரீரப் பிணை
பேருந்தில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட நிலையில், அவரை தலா ரூ. 200,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
