50வது நாளில் கால்பதிக்கும் “கோட்டா கோ ஹோம்” போராட்ட பூமி (Video)
கொழும்பு - காலிமுகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 09ம் திகதி ஆரம்பிக்கப்ட்ட போராட்டம் இன்று 49ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த போராட்டமானது தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்துக்கு நாள்தோறும் பலர் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.
50 வது நாளில் இடம்பெறப்போகும் சிறப்பு நிகழ்வுகள்
‘கோட்டா கோ ஹோம்’ என்ற கோஷத்துடனான இந்த ஆர்ப்பாட்டமானது, நாளை 50 ஆவது நாளில் கால் பதிக்கிறது.
இந்நிலையில் 50வது நாளை முன்னிட்டு போராட்டக்களத்தில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.