பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தப்பிச்செல்பவர்களை அடையாளம் காண நடவடிக்கை
குற்ற விசாரணை நடவடிக்கைகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், முகத்தை அடையாளம் காணும் அதிநவீன தொழில்நுட்பத்தை பொலிஸார் நிலை நிறுத்தியுள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று இதனை அறிவித்துள்ளார்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கடுமையான குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச்செல்லும் குற்றவாளிகளை அடையாளம் காண இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முக அடையாளம் காணும் மென்பொருள்
இதனையடுத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்ட 1,092 நபர்களின் படங்களை அதிகாரிகள் அமைப்பில் பதிவேற்றியுள்ளனர்.
“இந்த மேம்பட்ட முக அடையாளம் காணும் மென்பொருள், கண்காணிப்பு பட்டியலில் உள்ள எவரையும், அவர்கள் மாறுவேடமிட முயன்றாலும், தானாகவே கண்டறியும்” எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri