பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் வைரஸ்!பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட தகவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட, புதிய வகை ஒமிக்ரோன் (Omicron) கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில்,பிரித்தானியாவில் ஒமிக்ரோன் (Omicron) வைரஸால் மூன்றாவது நபர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், இங்கிலாந்தில் கடைகள் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களுக்கு முகக்கவசம் (மாஸ்க்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் புதிய உத்தரவு அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயமாக பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் நடைமுறையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடக்க நிலையில், புதிய வகை கொரோனாவை பற்றி நமக்கு அதிகம் தெரியாது எனவும்,விஞ்ஞானிகள் அடுத்தடுத்து அது பற்றி ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
ஒமிக்ரோன் வைரஸ் மிக விரைவாக பரவி வரும் நிலையில், இரண்டு தடுப்பூசிகளை எடுத்து கொண்டவர்கள் இடையேயும் இந்த வைரசானது விரைவில் பரவக்கூடும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க Cineulagam

நடிகரான பிறகு தனது கண்டக்டர் நண்பர்களை சந்தித்த ரஜினி! அப்போது எடுக்கப்பட்ட அரிதான போட்டோவை பார்த்துள்ளீர்களா Cineulagam

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri
