தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வௌ்ளத்தினால் பாதிப்பு!
இலங்கைத் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று இடங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அம்பாறை, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் கடுமையான வௌ்ளநீர் தேங்கியுள்ளது.
வேறிடங்களில் தற்காலிகமாக தங்க வைப்பு
இதனையடுத்து இன்று அதிகாலை அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் அமானுல்லாவின் துரித முயற்சியினால் பல்கலைக்கழக பெண் மாணவிகள் ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாயலிலும் , ஆண் மாணவர்கள் ஒலுவில் அல் ஹம்றா பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு வேறிடங்களில் தற்காலிகமாக தங்க வைப்பதில் பிரதேசவாசிகளும் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இதற்கிடையே அம்பாறையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த மற்றும் உலர் உணவு விநியோகத்துக்கான ஏற்பாடுகளை இளைஞர்கள் தன்னார்வ அடிப்படையில் மேற்கொண்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
