வீட்டிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு! மேலதிக விசாரணையில் பொலிஸார்
வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை - மிரிஸ்ஸ, உடுபில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று(15) இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மிரிஸ்ஸ, உடுபில பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதல் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த அயல் வீட்டுக்காரர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்துப் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த வீட்டில் உள்ள கட்டிலுக்கு மேல் இருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri