புத்தளத்தில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு
புத்தளம் (Puttalam) - புதிய எலுவாங்குளம், ஐலியகிராமம் பகுதியில் காட்டு யானைத் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்வபமானது, இன்று (17) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், புத்தளம் மாவட்டத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரி உயிரிழந்தவரின் சடலத்தைப் பார்வையிட்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு உயிரிழந்த நபர், முந்தல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனவும் தோட்டமொன்றில் காவலாளியாக கடமை புரிந்து வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam