பதின்ம வயது சிறுமியை தவறான நடத்தைக்குட்படுத்திய நபர் கைது
வடமராட்சி - கிழக்கு குடாரப்பு பகுதியில் பதின்ம வயது சிறுமியை தவறான நடத்தைக்குட்படுத்திய 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த கைது நடவடிக்கை நேற்று (24.10.2024) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவான நிலையில் நீண்ட தேடுதலின் பின்னர் நேற்று (24) இரவு மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து பக்கத்து வீட்டில் வசித்த குறித்த நபர் சிறுமியின் வீட்டில் நுழைந்து அவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் சம்பவம் தொடர்பாக சிறுமி தெரியபடுத்தியதையடுத்து பெற்றோர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இதன் பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிறுமியை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அதே பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரையும் தேடுதலின் பின் கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri
