வாகன விபத்தில் இருவர் மரணம்
பொல்கஹவெல - அலவ்வ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.
அலவ்வயில் இருந்து பொல்கஹவெல நோக்கிப்பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் பொல்கஹவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை
எனினும், இருவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 45 மற்றும் 48 வயதுடைய நபர்களே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தையடுத்து பாவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri