க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (G.C.E.O/L) பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amid Jayasunadara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"இந்த வாரத்திற்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும். அவ்வாறு இல்லாவிடில் இந்த வாரம் முடிவடைந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின்னர் முடிவுகள் வெளியிடப்படும்.
பரீட்சை விண்ணப்பதாரர்கள்
மேலும், சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஒன்றரை மாதங்கயே ஆன இந்த குறுகிய காலத்துக்குள் முடிவுகளை வெளியிட இருப்பதை கல்வித்துறையின் வெற்றிகரமான மைல்கல்களில் ஒன்றாகவே பார்க்க முடியும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இந்த ஆண்டு 3527 மையங்கள், 535 ஒருங்கிணைப்பு மையங்கள் மற்றும் 33 வட்டார சேகரிப்பு மையங்களில் நடத்தப்பட்ட சாதாரண தரப் பரீட்சையில் 452, 979 பேர் தோற்றியிருந்தனர்.
மேலும், இவர்களில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
