இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என ஐ.நா.வில் அலிசப்ரி சீற்றம் (Video)
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே ஐ.நா.ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள் என்ற சொல்லை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்காமல் பலவந்தமாக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதாக அலி சப்ரி கடுமையாக சாடியுள்ளார்.
பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இலங்கைக்கு கல்வி கற்பிப்பதற்கான நிபுணத்துவம் மனித உரிமைகள் பேரவைக்கு இருந்தாலும் அது குறித்து சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நிபுணர்களுடன் இலங்கை கலந்துரையாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இன்று வெளியான முக்கிய செய்திகளை இக் காணொளியில் காணலாம்,
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri