கெஹல்பத்தர பத்மே - கமாண்டோ சாலிந்த தொடர்பில் பொலிஸாரிடம் இருந்து முக்கிய தகவல்
கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகிய இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பாக சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப்பிரிவில் இன்று (14) காலை நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
26 இலங்கையர்கள்
மலேசியாவில் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 26 இலங்கையர்களின் பட்டியல் இலங்கை பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

இதன்படி கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகிய இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக இராஜதந்திர மட்டத்திலோ அல்லது பொலிஸ் மட்டத்திலோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், குற்றப் புலனாய்வுத் துறையின் இரண்டு குழுக்கள் தற்போது மலேசியா மற்றும் தாய்லாந்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளன.
அத்தகைய கைது செய்யப்பட்டிருந்தால், அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிறகு அவர்கள் மீதான மேலதிக விசாரணைகளுக்கான அணுகல் பெறப்பட்டும்.
இதற்கிடையில், கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகிய இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பாக சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை" என தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan