வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளுடன் சந்தேகநபர்கள் கைது
கம்பஹா - மினுவாங்கொடை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்யச் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவை, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிற்றூந்து மற்றும் இரு உந்துருளிகளில் பயணித்த சந்தேகநபர்களிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள் மற்றும் 2 கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாதாள உலக நபர்

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஹீனடியன மகேஸ் என்ற பாதாள உலக நபரின் அறிவுறுத்தலின் பேரில், மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக தாம் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
ஹீனடியனா மகேஸ் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி வர்த்தகர்களை இலக்கு வைத்து கப்பம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு முன்னர் பல தடவைகள் குறித்த வர்த்தகரிடம் கப்பம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam