இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை பேரவையின் அறிக்கையை கவனமாக பரிசீலிக்கும் அமெரிக்கா
இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கையை கவனமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் குறித்த அறிக்கையில் அரசாங்க செயற்பாடுகளை இராணுவமயமாக்குதல், பொது சமூகத்தை மிரட்டுதல் என்பவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அத்துடன் சர்வதேச சமூகத்தின் மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் வலுவான தடுப்பு நடவடிக்கைகளை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. இந்த நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை தாங்கள் கவனமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் எதிர்காலம் மனித உரிமைகளை மதித்தல் மற்றும் கடந்த காலத்தை கையாள்வதில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதைப் பொறுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
