சஜித் பிரேமதாசவின் ஆட்சேபனையை நிராகரித்த நீதிமன்றம்
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆட்சேபனையை இன்று(19.03.2024) கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சி உறுப்புரிமை
அதனடிப்படையில், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான மேலும் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை நீடித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவுக்கு கட்சி உறுப்புரிமை வழங்குவதற்கு எதிராக சரத் பொன்சேகா கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனையடுத்தே அவரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam