விற்பனை செய்யப்படும் தபால் நிலையங்கள்! போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்
விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தபால் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக இந்த இரண்டு நாள் அடையாள பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
விடுமுறைகள் ரத்து
நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஒன்றிணைந்த தபால் முன்னணியின் அழைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் தபால் பணியாளர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் தபால் பணியாளர்கள் அடையாள பணி புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 17 மணி நேரம் முன்

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
