நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் கைது விவகாரம்: உறுப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - வெளியான உண்மைகள்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாகவும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மக்கள் போராட்ட முன்னணி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் பாலகிருஷ்ணன் பத்மசிறி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (24.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் மோசடி குற்றச்சாட்டு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நுவரெலியா பிரதேச சபையின் அதிகார வரம்புக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் அபிவிருத்தித் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விடயத்தில், நில உரிமையாளர் ஒருவருக்கு முறையற்ற ஆதாயம் கிடைக்கச் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரின் பிணை மனுவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும், சந்தேகநபரை ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆதரவாளர்களை வைத்து தாக்கிய பிரதேச சபை தலைவர்
இதற்கிடையில், நேற்றைய தினம் வேலு யோகராஜின் ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரதேச சபை உறுப்பினர் பாலகிருஷ்ணன் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வேலு யோகராஜ் பதவியில் இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பிலும், கந்தபுல பகுதியில் உள்ள நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு வழங்கியமை தொடர்பிலும், மேலும் வீதி புனரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டதாகவும் முறைப்பாடுகள் அளித்துள்ளேன்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (24) அடையாளம் தெரியாத மூவர் தன்னை தாக்கினார்கள். இந்த தாக்குதலுக்கு வேலு யோகராஜின் ஆதரவாளர்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.
தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது என்னிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்ய வருகை தந்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது? Cineulagam