நுவரெலியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்
புதிய இணைப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல்போயுள்ளதாக மாவட்டச்செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மொத்தம் 6,959 குடும்பங்களைச் சேர்ந்த 24,681 பேர் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 2,934 குடும்பங்களைச் சேர்ந்த 11,453 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 123 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு உள்ளிட்ட ஏனைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 225 பேர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ராமையா திருச்செல்வத்தின் மேட்பார்வையின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றது.
செய்தி - திவாகரன்
முதலாம் இணைப்பு
நுவரெலியா மாவட்டத்தில் தாண்டவமாடிய சீரற்ற காலநிலை மெராயா எல்ஜின் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை தொம்சம் செய்துள்ளதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக கொத்மலை ஓயா உள்ளிட்ட அனைத்து கிளையாறு ஓடைகள் பெருக்கெடுத்தன. இதனால் பொது பயன்படுத்தும் வீதிகள் விவசாய காணிகள் உட்பட அனைத்தும் அழிவுக்குள்ளாகியுள்ளன.
மெராயா தலவாக்கலை பிரதான வீதி மெயராயா நகருக்கு அருகாமையில் உடைந்து போனமையினால் அங்கு பொது போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதனால் அந்த பிரதேசத்தில் வாழும் பொது மக்கள் தங்களுடைய அன்றாட கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதனால் பொது போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளன.
இதனால் முச்சக்கரவண்டிகளில் சிறிய ரக வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தில் பாதிப்படைந்துள்ள மக்கள் கூலி வாகனங்களில் செல்ல முடியாததனால் பல கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களுக்கு ஓரளவேனும் வருமானம் ஈட்டித்தந்த விவசாய நிலங்கள் என்றுமில்லாதவாறு பாதிப்படைந்துள்ளதனால் மரத்தில் விழுந்ததை மாடு முட்டிய கதையாக போய் உள்ளன. ஒரு சிலரது விவசாய நிலங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளன. நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள விவசாய நிலங்கள் மீண்டும் புனரமைக்க முடியாத நிலை சிலருக்கு ஏற்பட்டுள்ளன.
ஒரு சிலரது விவசாய நிலங்கள் மீண்டும் பண் படுத்துவதற்கு பாரிய சிரமம் மற்றும் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். எனவே குறித்த விவசாய நிலங்களையும் தங்களது வாழ் விடங்களையும் புனரமைக்க தேவையான உதவிகளை அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அனைத்து முக்கிய வீதிகளும்
மொத்தம் 5,729 குடும்பங்களைச் சேர்ந்த 20,649 பேர் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 2,124 குடும்பங்களைச் சேர்ந்த 8,718 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 79 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை, மண்சரிவு, காற்றழுத்தம் காரணமாக நுவரெலியாவுக்கு செல்லும் அனைத்து முக்கிய வீதிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள்
மேலும் தகவல் தொடர்பு சேவைகள் பெரும்பாலும் செயலிழந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மிகுந்த சிரமத்துடன் நடைபெற்று வருவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொத்மலை மற்றும் வலப்பனை பகுதிகளில் இராணுவத்தினரும், ஏனைய மீட்புப் படையினரும் தீவிரமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பிற அடிப்படை நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வழியாக கொழும்பு செல்லும் பிரதான வீதிகள் நேற்று (01) மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |