மாணவர்களுக்கு போஷாக்கான உணவு! ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர்(Photos)
கொட்டகலை - லிந்துலை பகுதியில் உள்ள மாணவர்களுக்கு போஷாக்கான உணவு வழங்கும் திட்டம் தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் இந்த உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
6200 மாணவர்கள் பயன்பெறுவர்

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 54 பாடசாலைகளைச் சேர்ந்த 6200 பிள்ளைகளுக்கு காலை நேர உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஒரு பாடசாலை மாணவருக்கு 100 ரூபாய் என்ற அடிப்படையில் இந்த உணவுப் பொதி வழங்கப்படவுள்ளது.
இன்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர், மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
போஷாக்கான உணவுகளை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri