சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 809,595 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகளாவர். அந்த எண்ணிக்கை 167,095 ஆகும்.
அம்மாச்சி உணவகத்தில் ஊழியர்களுக்கு எதிராக நடக்கும் முறைகேடுகள்! கண்ணீருடன் பெண் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்
பயணிகளின் வருகை
அத்துடன் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 68,961 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இருப்பினும், இந்தத் தரவுகளை அவதானிக்கும் போது கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளமை தெரியவருகிறது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan