இலங்கையில் ஆபத்தாக மாறும் நோய் நிலைமை: அதிகரிக்கும் உயிரிழப்பு
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 3,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், டெங்கு நோய் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17,779 ஆகும்.
டெங்கு நோயாளர்கள்
இரண்டாவது அதிகளவான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 16,665 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகளவான நோயாளர்கள் பதிவான மாகாணமாக மேல் மாகாணம் தொடர்ந்து நீடிப்பதுடன், இந்த ஆண்டில் இதுவரை மேல் மாகாணத்தில் 44,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இரண்டாவதாக தென் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்தப் பிராந்தியத்தில் 12,586 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடு முழுவதும் டெங்கு நோய் பரவி வரும் இந்த வேளையில், 175 அதி-அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.