அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக் காட்டுவோருக்கு கொலை மிரட்டல்
அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுவோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் துப்பாக்கிச் சூடுகள், இனந்தெரியாத நபர்களின் கொலை கலாச்சாரம் நாடு முழுவதிலும் வியாபித்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலைமையினால் சிவில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிவிலியன்கள் மட்டுமன்றி ஊடகத்துறையில் பணியாற்றுவோர் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு கடும் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்து பாடம் நடத்த முடியும் என இந்த அரசாங்கம் தேர்தல் பிரசாரங்களின் போது கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதன் பின்னர் நாட்டில் கொலைக் கலாச்சாரம் நகரங்களிலிருந்து பல நகரங்களுக்கு நகர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam