பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மீது சுமத்தப்பட்ட பாரதூர குற்றச்சாட்டு
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தீவிரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் சேவயைிலிருந்து நீக்கப்பட்டவர் என நாடாளுமன்ற உறுப்பினுர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர படுகொலைச் சம்பவத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாதாள உலகக் குழு செறய்பாடு என விபரித்திருந்தார் என சாமர சம்பத் தசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு கடந்த காலம் பற்றி பேசுவதென்றால் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கடந்த காலத்தை பற்றியும் பேச முடியும் என தெரிவித்துள்ளார்.
ஆனந்த விஜேபால 1988ம் ஆண்டு துணை பொலிஸ் பரிசோதகராக சேவையில் இணைந்து கொண்டு பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த போது புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டார். ஆயுத பிரிவொன்றின் தலைவராக செயற்பட்டதன் காரணமாகவே ஆனந்த விஜேபால பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுத குழுவின் தலைவர் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் அடிப்படையிலேயே ஆனந்த விஜேபால பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவு தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டவர் இன்று பொலிஸ் திணைக்களத்தினை வழிநடத்துவதாக சாமர சம்பத் தசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.



