ஆளும் தரப்பு எம்.பி செலுத்தி சென்ற வாகனம் விபத்து
தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார ஓட்டிச் சென்ற கார், ஹெம்மாத்தகம நகரில் உயர் மின்னழுத்த மின் கம்பியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர், மாவனெல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விபத்தின் பின்னர் மின் கம்பம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிப்பு
இதனால், ஹெம்மாத்தகம நகரம் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஹெம்மாத்தகம மின்சார நுகர்வோர் மைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, அறுந்து விழுந்த மின் கம்பியை பாதுகாப்பாக அகற்றி தற்காலிகமாக மின்சாரம் வழங்கியுள்ளனர்.

விபத்துக்குள்ளான காரில் நாடாளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார மட்டுமே பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam