அரசாங்கம் சட்டத்தை சமமாக நடைமுறைப்படுத்த தவறியுள்ளது: முஜிபுர் ரஹ்மான்
ஜனாதிபதி அநுரகுமார சட்டம் அனைவருக்கும் சமமானது என கூறி வருகின்ற போதிலும் அது அவ்வாறில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி ஏற்ற காலம் முதல் இவ்வாறு கூறி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஜே.வி.பியின் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்கு மேலே இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பிரச்சினையின் போதும், இரத்தினபுரியில் இடம்பெற்ற பிரச்சினையயின் போதும் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை நேரில் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் சட்டத்திற்கு மேல் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..
எனினும் ஜனாதிபதி அநுர எந்த நேரத்திலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என மந்திரம் ஒதி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கூறுவது போல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ரண்வலவின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரன்வல மற்றும் இரத்தினபுரி சம்வங்களின் போது சட்டம் எவ்வாறு வளைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயமே என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.