ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு
உள்ளுராட்சி மன்றங்களுக்கான வரவு செலவுத் திட்டங்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தங்காலை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்காலை மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம் காணப்படுகின்றது.
வரவு செலவு திட்டம் தொடர்பான வாக்கெடுப்பின்போது ஒன்பது உறுப்பினர்கள் ஆதரவாகவும் 10 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
சர்வஜன பாளையம் கட்சியின் உறுப்பினர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து வரவு செலவுதத்திற்கு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார்.
இதேவேளை, யட்டியாந்தோட்டை பிரதேச சபை வரவு செலவுத் திட்டத்தில் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது
. இந்த பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் தேசிய மக்கள் சக்தியிடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன் எதிராக 17 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளர்.
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan