மாகாணத் தேர்தலை நடத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசு தீவிரம்
மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஒரு முக்கிய நகர்வாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைப்பதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளது.
மக்களுக்கு நேரடியாகத் தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படமாட்டாது எனத் தெரியவருகின்றது.
மாகாண சபைத் தேர்தல்
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒடுக்கல் போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசுக்கு ஆதரவு ஏற்பட்டுள்ளது.
இதனையும் ஒரு வாய்ப்பாகக் கருதி விரைவில் தேர்தலுக்குச் செல்வதற்கு அரசு எதிர்பார்க்கின்றது.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக பாதீட்டு கூட்டத் தொடருக்கு மத்தியில் சர்வ கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.
எந்த முறையில் தேர்தலை நடத்துவது என்பது பற்றி உறுதியான முடிவொன்றை எடுப்பதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது என்று அறியமுடிகின்றது.