கொழும்பு மாநகரத்தில் என்.பி.பி. ஆட்சி உறுதி! லால் காந்த திட்டவட்டம்
கொழும்பு மாநகர சபையில் நாம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டோம். இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பை மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளது என அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையில் எதிரணியே ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பு மாநகர சபை
"கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மைப் பலத்தை உறுதிப்படுத்திவிட்டோம்.

அதிகாரபூர்வமற்ற வகையில் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டிய வேலை மட்டும்தான் உள்ளது.
எமது மேயரும் பதவியேற்றத் தயாராகவுள்ளார்." என்றார்.
எதிரணிகளின்
எனினும், கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அரசுக்கு வழங்கப் போவதில்லை. எதிரணிகளின் ஒத்துழைப்புடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியே மலரும். எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
” கொழும்பு மாநகர சபை தொடர்பில் கட்சிகளுடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றோம். பல கட்சிகள் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளன.
எனவே, கொழும்பில் ஆட்சியை அரசு இழக்கும். அரசுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த சில சுயாதீனக் குழுக்கள் எம்மையும் சந்தித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலேயே கொழும்பு மாநகரில் ஆட்சி அமையும்." - என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam