ஒருவர் கூட விடுபடமாட்டார்! ஜனாதிபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
புதிய இணைப்பு
அரசாங்கத்தால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட ஊழல்கள் மற்றும் தவறுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவர் கூட விடுபடமாட்டார் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
புளத்சிங்களவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, ஆட்சிக்கு வந்து அரசாங்கத்தின் உள்விவகாரங்களை ஆராய்ந்த பின்னரே, இடம்பெற்றுள்ள தவறுகளின் அளவை அரசாங்கம் கண்டறிந்ததாகக் கூறினார்.
"நாங்கள் வெளியே இருந்தபோது ஊழல்களைப் பற்றிப் பேசினோம். ஆனால் உள்ளே வந்து நமது நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்று ஒவ்வொன்றாக ஆராயும்போது, நமது நாடு எவ்வளவு பெரிய தவறுகளை எதிர்கொண்டுள்ளது என்பதைப் பார்க்க முடிகிறது" என்று திசாநாயக்க தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில், "எங்கள் அரசாங்கம் - இரண்டு ஆண்டுகள், நாட்டிற்கு நன்மை” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (06) புலத்சிங்களவில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில் பெருமளவிலான அமைச்சர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதேபோல், எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நிகழ்ச்சிகளைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri