அசோக அபேசிங்கவை சி.ஐ.டியில் ஆஜராகுமாறு அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்கவை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றில் வெளியிட்ட தகவல் தொடர்பாக விசாரணை நடத்தவே அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்தியதாகவும் இதற்கு பணத்தை செலவிட்டவர் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி எனவும் அசோக அபேசிங்க குறித்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு செய்திருந்தனர்.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam