குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களத்தில் குவியும் மக்கள் கூட்டம்
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக பெருந்தொகையான மக்கள் வௌ்ளம் நாள்தோறும் முண்டியடிக்கத் தொடங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளாந்தம் 2500 வரையான கடவுச்சீட்டுகளை மட்டுமே திணைக்களம் இதுவரை காலமும் விநியோகித்து வந்துள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மாத்திரமே தற்போதைக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
முன்பதிவின்றி குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களத்திற்கு வருகை
எனினும் நாள்தோறும் 2000 தொடக்கம் 2500 பேர் வரையான பொதுமக்கள் முன்பதிவு இன்றி கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு வருகை தருவதன் காரணமாக அப்பிரதேசத்தில் பெரும் சனநெரிசல் ஏற்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் அங்கு பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாருடன் பொதுமக்கள் முறுகல் நிலையை ஏற்படுத்திக்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.