புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான பாடசாலைகளின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவில்லை என பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் சுமார் 50 சதவீதமான விண்ணப்பங்களே கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை பாடசாலைகளின் அதிபர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
எனினும், அதிபர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினால் பல அதிபர்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவில்லை எனத் தெரியவருகின்றது.