சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை – நாமல்
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போலிச் செய்திகளை கட்டுப்படுத்தும் முனைப்புக்களானது சமூக ஊடகங்களை ஒடுக்குவதாக அர்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டுவிட்டர் ஊடாக ஊடகமொன்று நேர்காணல் வழங்கிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களை ஒழங்குபடுத்துவதானது சமூக ஊடகங்களையோ பிரதான ஊடகங்களையோ ஒடுக்கும் நடவடிக்கையல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போலிச் செய்திகளை வெளியிடுவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.