பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்(Photos)
சுழிபுரம் - காட்டுப்புலம் அ.த.க. பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கூறி அந்த பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று (26) பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் பாடசாலைக்கு வந்தது தொடக்கம் அவர் மாணவர்களது நலன்கள் மீது காட்டுகின்ற அக்கறை, மாணவர்கள் மீதான அணுகுமுறை மற்றும் பாடசாலையின் தலைமைத்துவம் என்பன சிறப்பாக காணப்படுவதால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கூறி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
கவனயீர்ப்பின் பின்னர் வலயக்கல்வி பணிமனைக்கு கடிதம் ஒன்று கையளிக்கப்போவதாகவும் ஐந்து நாட்களுக்குள் தகுந்த பதில் தராவிட்டால் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த அதிபர் பாடசாலைக்கு வந்த பின்னர் வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்
ஒருவர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







