ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்க தயாராக இல்லை! - அமைச்சர் நாமல்
அமைச்சர் உதய கம்மன்பில தொடர்பில் தமது கட்சியின் பொதுச் செயலாளர் விடுத்த அறிக்கை தொடர்பில் ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்க பொதுஜன பெரமுன தயாராக இல்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் கட்சிக்குள் விவாதிக்கப்பட வேண்டும், ஊடகங்கள் மூலமாக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுச்செயலாளரின் அறிக்கை அல்லது அமைச்சர் உதய கம்மன்பில தொடர்பான எந்தவொரு கேள்வியையும் பற்றி கருத்து தெரிவிக்க தாம் தயாராக இல்லை.
மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 5000 ரூபா கொடுப்பனவை செலுத்த 87 பில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அமைச்சர் நாமல் குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவைக் குறைக்க ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், அந்த நிறுவனங்களை நடத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தும்போது அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களின் பரிந்துரைகளை அரசாங்கம் கேட்க வேண்டும்.
எரிபொருள் விலையை அதிகரிக்கும் திட்டம் அத்தகைய ஒரு நடவடிக்கையாகும் என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்றாலும், அரசாங்கங்கள் அத்தகைய முடிவுகளை எடுக்க தயக்கத்துடன் கட்டாயப்படுத்தப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri