பயத்தால் அல்ல, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையே நாம் பொறுமை காக்கின்றோம்! - ஜீவன் தொண்டமான்
பயத்தால் அல்ல, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையே நாம் பொறுமை காக்கின்றோம், நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் அமையும் என நம்புகின்றோம் என இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும் ஆயிரம் ரூபாவை எப்படி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டறிவதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் கம்பனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 50 ரூபா, 100 ரூபா எனக் கூறிக்கொண்டு கடந்த ஆட்சியின்போது 5 வருடங்கள் கடத்தப்பட்டன. அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை.
ஆனால் இன்று கம்பனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம்வரை சென்றுள்ளோம். இந்நிலையில் தொழிலாளர்களை உசுப்பேத்துவதற்கு சிலர் முயல்கின்றனர்.
அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது, அப்படி இருக்கையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியாவது ஏன் சம்பள உயர்வை வழங்க முடியாது எனவும் கேட்கின்றனர். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது.
அதற்கென நடைமுறைகள் உள்ளன. இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யும் உரிமையும், நீதிமன்றம் செல்லும் உரிமைகளும் கம்பனிகளுக்கு இருக்கின்றன.
ஆனால் 5ஆம் திகதி நல்லமுடிவு வரும் என நம்புகின்றோம். தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
பெற்றுக் கொடுத்தும் வருகின்றோம். மற்றைய தரப்பினரும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர். அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதையே பணியாக முன்னெடுக்கின்றனர்.
நாம் பொறுமையாக இருக்கின்றோம். அதற்குப் பயம் காரணம் அல்ல. நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்கின்றோம். சிலவேளை நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பதும் தெரியும். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும்.
இது தொடர்பில் தொழில் அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஊவாவில் தமிழ் கல்வி அமைச்சை எவ்வாறு பெற வேண்டும் என்பதும் எமக்கு தெரியும். மாகாண சபைத் தேர்தல் முடிந்ததும் அதனைப் பார்க்கலாம் எனவும் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 6 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
