சீனாவை எதிர்க்கவில்லை – ஐக்கிய மக்கள் சக்தி
சீனாவை எதிர்க்கவில்லை எனவும், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளையே எதிர்க்ககின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் இந்த விடயத்தை இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
சிலர் தாம் நாடுகளை எதிர்ப்பதாக கூறிய போதிலும் சீன அரசாங்கத்தையோ, அமெரிக்காவையோ, இந்தியாவையோ எதிர்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய இலங்கை அரசாங்கம நாட்டை காட்டிக் கொடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு சாதக நிலைமை ஏற்படக்கூடிய வகையிலேயே எந்தவொரு நாட்டுடனும் தொடர்புகளை பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிலன்டிவா இன்வெஸ்ட்மன்ஸ் என்ற நிறுவனத்தின் ஊடாக உள்நாட்டு சொத்துக்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.