ஆறு மாதங்களுக்கு நிறுத்தப்படும் வடக்கு மாகாண தொடருந்து சேவைகள்
வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவைகள் ஆறு மாத காலத்திற்கு நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (07.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கிடையிலான பாதை அபிவிருத்திக்காகவே 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று முதல் கொழும்பிலிருந்து மஹவ வரையும் அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையுமே தொடருந்து சேவைகள் இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தொடருந்து சேவை
இதேவேளை, மட்டக்களப்பு தொடருந்து பாதையையும் இவ்வருடம் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை புதிய தொடருந்து சேவையையும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
