வடக்கு மாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டம்
ஊர்காவற்றுறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க உருண்டி கோட்டை (Urundy Fort) மற்றும் கடவுக்கரை (Kayts Jetty) பகுதிகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சி சாதகமாகி உள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று(12.02.2026) வடக்கு மாகாண சுற்றுலா துறையினர், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபையினர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அப்பகுதிகளில் நிலவும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
01. புதிய ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள்: பயணிகளின் வசதிக்காக ஊர்காவற்றுறை கடவுக்கரை (Jetty) பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வறைகள் மற்றும் சுத்தமான கழிவறைகள் உடனடியாக அமைக்கப்படவுள்ளன.

02. சுற்றுலா மேம்பாடு: உருண்டி கோட்டை பகுதியை மையமாகக் கொண்டு சுற்றுலா நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
03. உடனடி நடவடிக்கை: இந்த பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தமது முழுமையான ஒத்துழைப்பையும் சம்மதத்தையும் வழங்கியுள்ளனர்.



இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam