ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மீண்டும் விளக்கமறியலில்
இதன் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி! வெளியாகியுள்ள வானிலை எச்சரிக்கை
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam