மாற்றுத்திறனாளிகளுக்கான வட மாகாண மட்ட நடனப் போட்டி
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித் ரூ 2025” (நடனப் போட்டி) வடமாகாண மட்ட போட்டி கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (17.06.2025) நடைபெற்றுள்ளது.
ஐந்து மாவட்ட குழுவினர்
ஐந்து மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகள் குழுவினர் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
குறித்த போட்டி நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
முதல் இடத்தை பெற்ற மாவட்டம்
வடமாகாண போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தினையும், இரண்டாம் இடத்தினை யாழ்ப்பாண மாவட்டமும், மூன்றாம் இடத்தினை வவுனியா மாவட்டமும் பெற்றுக்கொண்டது.
முதலாம் இடத்தினைப்பெற்ற கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
