வடமாகாண ஆளுநருடன் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வடமாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்துள்ளார்.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிடடர் பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்தியாவால் அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து சுட்டிக்காட்டிய உயர் ஸ்தானிகர், இம்மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நல்வாழ்விற்காகவும் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் வலியுறுத்திக்கூறினார்.
— India in Sri Lanka (@IndiainSL) May 27, 2023

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திஇந்தச் சந்திப்பின்போது, ‘‘வடமாகாணத்தில், இந்தியாவினால் முன்னெடுக்கப்படும்
பல்வேறு திட்டங்கள் குறித்து, உயர்ஸ்தானிகர் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும், மக்களின் நலனுக்காகவும், இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும்‘‘ இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |