வடக்கு மாகாண ஆளுநர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு விடுத்துள்ள பணிப்புரை
வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மணல் விநியோகத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை முறைப்படுத்தி அனைத்து மன்றங்களுக்கும் பொதுவானதொரு நடைமுறையை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் இன்று (23.04.2026) நடைபெற்றது.
குழப்பங்களைத் தீர்க்க விசேட குழு
இக்கலந்துரையாடலின்போது ஆளுநர் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் மற்றும் தீர்மானங்கள் வருமாறு:
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணத் திறைசேரிக்கான நிதி வருவாயை அதிகரிக்கும் வகையில் புதிய பொறிமுறைகள் அவசியமாகும்.

குறிப்பாக, 'குடிபுகு சான்றிதழ்' பெறுவதை உறுதிப்படுத்தக் கண்காணிப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். இச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளாமல் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனங்களை அடையாளப்படுத்தி, அவற்றுக்கு எதிரான முதற்கட்ட நடவடிக்கையாக அறிவித்தல்களைக் காட்சிப்படுத்த வேண்டும்.
இது தொடர்பான மாதாந்த முன்னேற்ற அறிக்கையை உள்ளூராட்சி ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான கடைகளைப் பெற்றுக்கொண்ட உரிமையாளர்கள், அவற்றை விதிகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு மாற்றியுள்ளனர்.
இது தொடர்பான குழப்பங்களைத் தீர்க்க விசேட குழுவொன்றை அமைத்து ஆராய்ந்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நேரடிக் கள ஆய்வுகளின் பின்னர்
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட சிறுவர் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் அவற்றின் போதாமை குறித்துப் பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார்.

அடையாளம் காணப்பட்டுள்ள சில புதிய திட்டங்கள் குறித்து மேலதிக நேரடிக் கள ஆய்வுகளின் பின்னரே இறுதி முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் காணி ஆணையாளர் அலுவலகங்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இந்த விசேட மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், மாநகர சபை ஆணையாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri